Friday, June 06, 2008

என் உயிரை ஊடுருவிய பாரதி வரிகள்

வாழ்க பாரதி!...

மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளனயாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு -- அல்லாலுயிர்பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச் செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே -- நெல்லாமெனஎண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று இயங்கி யிருப்பவளே.

உள்ளம் குளிராதோ -- பொய்யாணவஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ -- அம்மாபக்திக் கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே -- அனைத்திலும்மேவி யிருப்பவளே!

Saturday, May 31, 2008

தமிழ்

கடும்பொருள் உடையவர் மதியுடை மதியவ
கழனியிற் கிடந்துழல் எளியனுக்கெளியவ
களம்புகு மறவரின் மனமுறை மணியவ
கரும்பமு தமிழ்மக மொழியொலி கடந்தவ!