Saturday, August 26, 2006

இன்னும் தவம்...இசைக்காக!


"woofer" speaker-ல் பாடல்களை கேட்பதற்காக பக்கத்து வீட்டு ஜன்னலை நோக்கி காதுகளை தீட்டி வைத்து ரசித்த ஒரு காலம் இன்னும் மனதில் பசுமையாக...
இனிய பாடல்களை தேடி பலர் வாசற்படிகளில் தவம்கிடந்து வாங்கிய ஒலிநாடாக்களின் இசை உயிரில் இன்னும் பதிவுசெய்யப்பட்டுக் கிடக்கிறது....

இசை பயில உத்தரவு கிடைக்காததால், கிடைக்கத்தவறிய அறிவை எண்ணும் பொழுது மனதில் ஒரு பாரம்...
தன்னிச்சையான காலத்திலும் இசை நாடி நான் சென்றேன்...இசையோ, நீ நான் சொல்லும் நேரத்தில் தான் வர வேண்டும் என்று என்னை ஏளனம் செய்தது...
நேரமின்மை, 'இரவு அலுவல்' என் விரோதிகள் ஆயின. இன்றோ-
வேற்று கண்டத்தில் நான்...இசையறிவு நாடி இன்னும் என் தேடல்!

உன்னை அடைந்தே தீருவேன் என்று உள்ளத்தில் ஒரு தீ!
இன்னும் தவம் இங்கு....இசைக்காக!

Tuesday, August 08, 2006

கவிஞனின் பார்வை


உனது பார்வையில் மட்டும் உலகம் ஏன் உருண்டையாகத் தெரியவில்லை?
'உலகம் உருண்டையில்லை' என்ற கற்பனையிலிருந்து நீயின்னும் மீளவில்லையா?

Thursday, July 27, 2006

அன்னிய மண்ணில் என் மெளனம்


தோசை, "பண்டிகை பலகாரம்" ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டது!
ஒவ்வொரு நாளும் "korn flakes" காலையாய் விடியல்...

தூக்கம் இரவில் இல்லை ...கிடைக்கும் நேரத்தில் சுருங்கிக் கொண்டது.
ஏழையின் சொற்ப சம்பளமாய், எங்களுக்கெல்லாம் "இரவினில்" உறக்கம்!

இஸ்திரி பெட்டி தரும் அம்மாவின் நினைவு,
காலை அவசரத்தில் கசங்கிய சட்டையின் காட்சி...

மணி பார்க்கும் போதெல்லாம்,
இந்திய நேரத்தையும் சேர்த்து கணக்கிடுகிறது மூளை

"laptop" வாங்க கனவு கண்டது ஒரு காலம்...
என்னை விட்டு எங்காவது தொலைந்து போ-சொல்ல வைக்கும் வேலை சுமை...

நேற்று முதல் முறையாய் மது அருந்த உந்துதல்
அதனை ஒடுக்கியது அப்பாவின் நம்பிக்கை...

பணம் காணும் மாயையில் மறந்து போன MBA ஆசைகள்,
தொலைதூரக் கல்வியாய் இப்போது வடிவம்.

"Onsite" கொடு என்ற அவசரத்தின் விளைவு,
கணப்பொறியியல் படித்த ஒரு அரசியல்வாதி!

தாயின் குரல் கேட்க "google talk" கில் பல நாட்கள் தவம்....
"webcam" பார்த்து கழிகின்றது காலம்...

அன்னியராய் அனைவரும்...உறவுகளை தொலைத்து விட்டேனோ?
சில நேரத்தில் சந்தேக மெளனம்!!!