Saturday, August 26, 2006
இன்னும் தவம்...இசைக்காக!
"woofer" speaker-ல் பாடல்களை கேட்பதற்காக பக்கத்து வீட்டு ஜன்னலை நோக்கி காதுகளை தீட்டி வைத்து ரசித்த ஒரு காலம் இன்னும் மனதில் பசுமையாக...
இனிய பாடல்களை தேடி பலர் வாசற்படிகளில் தவம்கிடந்து வாங்கிய ஒலிநாடாக்களின் இசை உயிரில் இன்னும் பதிவுசெய்யப்பட்டுக் கிடக்கிறது....
இசை பயில உத்தரவு கிடைக்காததால், கிடைக்கத்தவறிய அறிவை எண்ணும் பொழுது மனதில் ஒரு பாரம்...
தன்னிச்சையான காலத்திலும் இசை நாடி நான் சென்றேன்...இசையோ, நீ நான் சொல்லும் நேரத்தில் தான் வர வேண்டும் என்று என்னை ஏளனம் செய்தது...
நேரமின்மை, 'இரவு அலுவல்' என் விரோதிகள் ஆயின. இன்றோ-
வேற்று கண்டத்தில் நான்...இசையறிவு நாடி இன்னும் என் தேடல்!
உன்னை அடைந்தே தீருவேன் என்று உள்ளத்தில் ஒரு தீ!
இன்னும் தவம் இங்கு....இசைக்காக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment