
தோசை, "பண்டிகை பலகாரம்" ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டது!
ஒவ்வொரு நாளும் "korn flakes" காலையாய் விடியல்...
தூக்கம் இரவில் இல்லை ...கிடைக்கும் நேரத்தில் சுருங்கிக் கொண்டது.
ஏழையின் சொற்ப சம்பளமாய், எங்களுக்கெல்லாம் "இரவினில்" உறக்கம்!
இஸ்திரி பெட்டி தரும் அம்மாவின் நினைவு,
காலை அவசரத்தில் கசங்கிய சட்டையின் காட்சி...
மணி பார்க்கும் போதெல்லாம்,
இந்திய நேரத்தையும் சேர்த்து கணக்கிடுகிறது மூளை
"laptop" வாங்க கனவு கண்டது ஒரு காலம்...
என்னை விட்டு எங்காவது தொலைந்து போ-சொல்ல வைக்கும் வேலை சுமை...
பணம் காணும் மாயையில் மறந்து போன MBA ஆசைகள்,
தொலைதூரக் கல்வியாய் இப்போது வடிவம்.
"Onsite" கொடு என்ற அவசரத்தின் விளைவு,
கணப்பொறியியல் படித்த ஒரு அரசியல்வாதி!
தாயின் குரல் கேட்க "google talk" கில் பல நாட்கள் தவம்....
"webcam" பார்த்து கழிகின்றது காலம்...
அன்னியராய் அனைவரும்...உறவுகளை தொலைத்து விட்டேனோ?
சில நேரத்தில் சந்தேக மெளனம்!!!
2 comments:
very good kavidhai aanalum thingardhule irukkiye one buddhi innum pogala! Just kidding!
Do keep writing! and Welcome to the blog world!
algana ovumigal ulla kavithai
amma appa anbae annukira sentence good
compiling efficient ,selection of words good
best kavithai
Post a Comment