Friday, July 24, 2009
நினைவினில் நீ….
மேகத்திற்கு பின் மறைந்திருக்கும் முழுனிலவோ?
என் மனதில் மறைந்து விளையாடும் உன் முகம்
இரு முறை கண்டோம் இருவரும்...
இரக்கை முளைத்து, களிப்பினில் இருதயம்...
இனித்தது இனித்தது கணம் நீ இருக்கையில் அருகினில்...
இறுதியில் பதிந்தது வெறும் நிழலுரு அறிவினில்!
நாணம் நிமிர்கயில் நிமிர்ந்தது,
நிலவுனை மறைத்தது...
கிறங்கிய நிலையினில் நானும்
நின் எழில்மிகு கரத்தினை காணும்
வியப்பினிலென் மதி இயங்கிட மறுத்தது...
'மறுமுறை வரும் வரும்'
மயங்கிய மனநிலை உரைத்தது...
'மறுமுறை மணவறை அன்றோ!'
மறுநாள் தெளிந்ததும்
குமிறிய மனம் உனை
நினைவிடை உருவி, பதித்திட துடித்தது...
கடைசியில் கிடைத்தது வெறும்
புகைப்படவுருவம்...
இழந்த நினைவிடம் கரைந்த முகம் எனும் மாயை !
அழிந்த நினைவுகள் முழுவதும் நிலவிடம் பணயம்!!
உன் குணம் எனும் நிலை மட்டும்
உள்ளத்துள் பதிவு...
உருவம் உயர்வினில் உறைவது
உணர்ச்சியில் அல்ல!
மேகத்திற்கு பின் மறைந்திருக்கும் நிலவு வெறும் உணர்ச்சி
மேகத்தை மீறி குணமெனும் கதிர்களை வீசும் நீ சூரியன்(யா) என்பதே உண்மை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment