Sunday, May 13, 2012

எழுச்சி !

எழுச்சி உதிர்ந்து இன்றோடு 'எண்ணாத' சில வருடங்கள் ...
எந்திர வாழ்வினில் நிறைந்திருக்கும் ஏக்கங்கள் !

நெறிகள் , அறங்கள் இல்லா தன்னல கொள்கை ...
அயலான் அரசாள - பணம் பண்ண உழைப்பு !

மயக்கம், மயக்கம்! மீண்டுமோர் அந்நியச் சிறை ...
ஒழிக, ஒழிக வெறுமை ! - நெஞ்சம் நிமிர்ந்து துணிய ,

எண்ணம் சீர்செய் 'நுண்ணிய எழுச்சி ' கொடு இறைவா..
ஏற்றம் தாங்கி முன்னேற்ற என் திருநாட்டை !

No comments: